சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Sunday 31 July 2011

தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மக்கள் வெள்ளம்

எகிப்தின் மக்கள் எழுச்சியின் மையமாக திகழும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் விசாரணையை துரிதப்படுத்துதல், மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், சிவிலியன்கள் மீதான விசாரணையை நிறுத்துதல், நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்தை உறுதிச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று திரண்டனர்.

முபாரக்கின் விசாரணை அடுத்த வாரம் துவங்கவிருக்கவே, அனைத்து போராட்ட இயக்கங்களும் இணைந்து ‘யூனிட்டி மார்ச்’ நடத்தப்படும் என முன்னர் தகவல் வெளியானது. பேரணியை இஸ்லாமிய அமைப்புகள் கைவசப்படுத்தும் என குற்றம் சாட்டி ஒரு பிரிவு மதசார்பற்ற அமைப்புகள் இப்பேரணியை புறக்கணித்தன. ஆனால் ரெவியலூசன் யூத் கோஎலிசன் உள்ளிட்ட செக்குலர்-லிபரல் அமைப்புகள் பேரணியில் பங்கேற்றதாக அல்ஜஸீரா கூறுகிறது.

அதேவேளையில், நேற்று முன்தினம் ஸினாயில் கலவரம் நடத்தியவர்களை போலீஸார் கைதுச் செய்தனர். ஆயுதம் ஏந்தியவர்கள் சிலர் அப்பகுதியில் போலீஸ் நிலையத்தை கைப்பற்ற நடத்திய தாக்குதலில் போலீஸ் காரர் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை: முதலமைச்சர் ஜெயலலிதா

அ.தி.மு.க. அரசு பதவியேற்ற இரண்டு மாதத்தில், யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நிலத்தை அபகரித்தவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் மீது, பொலிசார் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கின்றனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின், முதல் செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பிற்பகல், 3.30 மணியளவில் துவங்கிய செயற்குழு கூட்டம், இரண்டு மணி நேரம் நீடித்தது. 

பின்னர், ஆக. 4 ல் துவக்கப்படும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி, நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று (நேற்று) காலை, ஒரு சம்பவம் காரணமாக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். (அப்போது குறுக்கிட்ட முதல்வர் கைது செய்யப்படவில்லை என்றார்)
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு வரவேற்பு எப்படி உள்ளது? 

கடந்த தி.மு.க. ஆட்சியில், ஏராளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், நில அபகரிப்பு வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமும் ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் வருகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து விசாரணை செய்ய, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, நில அபகரிப்பு வழக்கு விசாரணை மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்த, விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். 

நில அபகரிப்பு வழக்குகளில் 1,400 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளீர்கள்?
இந்த ஆட்சியிலும், நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறை, பத்திரப்பதிவு துறை, பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
புகார்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டிவிட்டது. யார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து உங்கள் கருத்து? இதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும், நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் காங். தலைவரும் இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக, கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளாரே? 

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு மாத காலத்தில், யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நில அபகரிப்பு குறித்து, பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கின்றனர். பொலிஸ் துறை அந்த புகார்கள் மீது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யாரையும் இந்த அரசு பழிவாங்கவில்லை. 

கடந்த ஆட்சியில், அப்போதைய முதல்வர் தொடங்கிய தொலைக்காட்சியில், தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று முதலீடு செய்துள்ளது. இந்த தொலைக்காட்சியில் 20 சதவீதம் முதலீடு செய்த கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? 

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை, உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். இதில், இதற்கு மேல் நான் எதையும் கூற விரும்பவில்லை.
சானல் 4 ல் ஒளிபரப்பான கொடூர சம்பவத்திற்குப் பின், இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் அனைத்து எம்.பி.க்களும் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதே?
இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு அவைகளிலும் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டியது அவசியம். 

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 

சமச்சீர் கல்வியை நீதிமன்றம் உத்தரவிட்டும் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஆக. 2ம் திகதி ஒத்திவைத்துள்ளது. அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்.

அரசு கேபிள் தொலைக்காட்சி அமல்படுத்துவதன் நிலை குறித்து கேட்டபோது அரசு கேபிள் தொலைக்காட்சியை கொண்டு வருவதற்காக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. விரைவில் தொடங்கப்படும் என்றார்.

பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு

நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.

ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.
அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும்(USER NAME), கடவுச்சொல்லையும்(PASSWORD) கொடுத்து import என்பதை அழுத்துங்கள். 

சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.

முத்துப்பேட்டையில் தி.மு.க.வினர் 50க்கும் மேற்பட்டோர் கைது !

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து மாநிலம் முழுதும் பரவலாக தி.மு.க.வினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

முத்துப்பேட்டையில்  நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கைது செய்த ஸ்டாலினை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் முத்துப்பேட்டை பகுதியில் பதற்றம் எழுந்தது பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பின்பு அவர்களை விடுவிக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக தி.மு.க.வினரின் போராட்டங்களால் பதற்றம் எழுந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.வினர் பெருமளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கு

உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும்.

இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும். 

மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம்.
பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். 

லிபியா:எதிர்ப்பாளர்கள் ராணுவ தளபதியின் கொலையின் பின்னணியில் எதிர்ப்புக் குழு

லிபியாவில் முஅம்மர் கத்தாஃபியின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் ராணுவ தளபதி அப்துல் ஃபதா யூனுஸின் கொலையின் பின்னணியில் எதிர்ப்புக்குழு செயல்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Abdul-Fatah-Younis-007எதிர்ப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இஸ்லாமிய போராளி பிரிவான உபைத் இப்னு ஜராஹ் ப்ரிகேடர் என பெங்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிர்ப்பாளர்கள் குழுவின் எண்ணைய்த்துறை அமைச்சர் அலி துர்ஹூனி தெரிவித்துள்ளார்.

முஅம்மர் கத்தாஃபிக்கு நெருக்கமான யூனுஸ் அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கிய பிப்ரவரி மாதம் கட்சி தாவி எதிர்ப்பாளர்கள் பக்கம் சேர்ந்தார். யூனுஸின் மரணம் குறித்து போராளி தலைவர் தகவல் அளித்ததாக தர்ஹூனி தெரிவித்துள்ளார். பெங்காசிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட வேளையில் யூனுஸும், அவரது இரண்டு உதவியாளர்களும் கொல்லப்பட்டனர். யூனுஸின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கொலைக்கு என்ன காரணம் என வினவியபொழுது அதுக்குறித்து விசாரணை நடத்திவருவதாக  தர்ஹூனி கூறினார்.

எதிர்ப்பாளர்களுக்கு நாட்டை ஆளும் தகுதி இல்லை என்பதன் உதாரணம்தான் யூனுஸின் மரணம் என கத்தாஃபியின் அரசு குற்றம் சாட்டியுள்ளது. கமாண்டரை பாதுகாக்க இயலாதவர்கள் எவ்வாறு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வார்கள்? என அரசு செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் வினவினார். இக்கொலையில் அல்காயிதாவுக்கு தொடர்பிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அதேவேளையில் கொலையை குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பாளர்கள் அரசு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது. விசாரணக்கு பிறகு அனைத்து விபரங்களும் தெளிவாகும் என எதிர்ப்பாளர்கள் அரசு அறிவித்துள்ளது.

இவ்வேளையில் லிபியா அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையத்தில் குண்டுவீசியதாக நேட்டோ அறிவித்துள்ளது. மூன்று சேட்டிலைட் டிஷ்ஷுகள் தாக்குதலில் தகர்ந்துள்ளன.

தாமாக முன்வந்து கைதானதாக நாடகம்: மு.க.ஸ்டாலின் கைது குறித்து மாவட்ட எஸ்.பி. தெரிவிப்பு

திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்தனர் போலீசார். அப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், என்ன வழக்கு என்று கூறாமல் ஒப்படைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரின் எதிர்ப்பை மீறிய போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

அப்படியானால் தானும் வருகிறேன் என்று கூறி போலிஸ் வாகனத்தில் மு.க.ஸ்டாலின் ஏறினார். பூண்டி கலைவாணனுடன் மு.க.ஸ்டாலினும் போலிஸ் வாகனத்தில் சென்றுள்ளதால் அப்பகுதியில் உள்ள தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருத்துறைப்பூண்டி போகும் வழியில் உள்ள ஆலத்தம்பாடியில் பூண்டி கலைவாணனை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேர் காவல்துறை வாகனத்தில் ஏறினர். போலீசார் வாகனம் திருவாரூர் சென்றடைந்தது.

திருவாரூரில் அம்மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனை மட்டும் வைத்துக்கொண்டு, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் சுமார் 300 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

Thursday 28 July 2011

சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது கோடீஸ்வரரின் பெயர்!!

தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள்.

 ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார்.

அபுதாபிக்கு அருகில் உள்ள ஃபுடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார். அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக ‘ஹமத்’ என்று முக்கால் கி.மீ. உயரம், 3 கி.மீ. நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரமாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார்.  செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில்கூட அவரது பெயர் தெரிகிறது.  இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.

சிந்திக்கவும்: ஒரு பக்கம் மக்கள் பசியால், பட்டினியால் சாவுகிறார்கள் இதை போன்ற செல்வந்தர்கள் பணத்தை இப்படி செலவு செய்கிறார்கள். இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகிலேயே அதிக பொருள் செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இப்படி பட்ட சுயநலம் கொண்டவர்களின் செல்வங்களை பறித்து ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

கருணாநிதி பேசியதை டேப் செய்த ஜாபர் சேட்

முன்னாள் உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட் வீட்டில் நடத்திய சோதனையில் பல ஓடியோ குறுந்தகடுகள் சிக்கியுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனவாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து வந்த சேட், அவரது பேச்சையே ஒட்டுக் கேட்டு டேப் செய்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சேட். கருணாநிதி எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் சேட்டிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுத் தான் முடிவெடுப்பார் என்பார்கள். 

அந்த அளவுக்கு கருணாநிதி, சேட் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார், நம்பினார். ஆனால் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் பேசியதையே ஒட்டுக் கேட்டு டேப் செய்து வைத்துள்ளார் ஜாபர் சேட் என்பது சமீபத்தில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கிடைத்த குறுந்தகடுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 

தற்போது மண்டபம் அகதிகள் முகாம் பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜாபர் சேட்டுக்குச் சொந்தமான வீடுகள், அவரது மாமனார் வீடு உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். மொத்தம் எட்டு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ள சேட்டின் வீடு, அவரது மாமனாரின் பெரியகுளம் வீடு, கருணாநிதியின் தனிச் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் வீடு ஆகியவற்றில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளனவாம். 

அண்ணாநகர் வீட்டில் 35 ஓடியோ குறுந்தகடுகள், 8 ஐபாடுகள் மற்றும் இரண்டு மடிக்கணணிகள் சிக்கியுள்ளன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளனவாம். ஜாபர் வீட்டில் சிக்கிய குறுந்தகடுகளைப் போட்டுப் பார்த்தபோது பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அதில் ஒன்றில் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் பேசிக் கொண்ட பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. 

அதாவது கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்டு அதைப் பதிவு செய்துள்ளார் ஜாபர் சேட். உளவு பார்க்குமாறு உத்தரவிடக் கூடிய பொறுப்பில் இருந்த கருணாநிதி பேச்சையே உளவு பார்த்துள்ளார் ஜாபர் சேட். இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான். 

மேலும் அவரது மடிக்கணணி உள்ளிட்டவற்றில் கிடைத்துள்ள சில முக்கியத் தகவல்களும் தி.மு.க. ஆட்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு வலுவான ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த குறுந்தகடுகள், மடிக்கணணிகள், ஐபாடுகள் உள்ளிட்டவற்றில் கிடைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் விரைவில் பல்வேறு வழக்குகள் அணிவகுக்கும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரைக்கு கீழே உள்ள மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் வாகனம் தயாரிப்பு

தரைக்கு கீழே பதிக்கப்பட்ட மின்கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டுதல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கொரிய தலைநகர் சியோலில் "சியோல் கிராண்ட் பார்க்" என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. ராட்சத ராட்டினம், ஹொட்டல், நீச்சல் குளம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. 



பூங்காவை சுற்றிப் பார்க்க டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது. டீசலுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து கொரியா அறிவியல், தொழில்நுட்ப கழகம் ஆய்வு நடத்தியது. மின்காந்த தூண்டுதல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்த தொழில்நுட்பத்தில் இயங்குவதற்கான வாகனங்கள் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதற்கு ஓன்லைன் எலக்ட்ரிக் வீக்கிள்(ஓஎல்இவி) என்று பெயரிடப்பட்டுள்ளது. 



இந்த டிராம் வண்டிக்கு தண்டவாளம் தேவையில்லை. 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இது கார் போலவே ஓடும். பூங்கா முழுவதும் டிராம் செல்லும் தடத்தில் அடையாளத்துக்காக நீல நிற கோடு போடப்பட்டிருக்கும்.
இந்த கோட்டுக்கு நேராக தரைக்கு கீழே சுமார் ஒரு அடி ஆழத்தில் மின்சார கம்பிகள் செல்லும். அந்த வழியாக செல்லும் போது மின்காந்த தூண்டுதல் விசையை பயன்படுத்தி மின்சாரத்தை வாகனம் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும். இதன்மூலம் இன்ஜின் இயக்கப்படும். 

இதுபற்றி பொறியிலளார்கள் கூறுகையில்,"பாதாள மின்கம்பியானது உயர் அழுத்த மின் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் மின்சாரம் எப்போதும் தடைபடாது. மின்காந்த தூண்டுதல் முறையில் மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின் இழப்பு அவ்வளவாக இருக்காது. சொற்ப அளவே புகை வெளியாகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது" என்றனர். 

பூங்காவில் இந்த வாகனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் டாப் 50 கண்டுபிடிப்புகளில் ஓஎல்இவி ஒன்று என்று டைம்ஸ் இதழ் கவுரவப்படுத்தி விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் விளம்பரங்களை தடை செய்வதற்கு

சமூக இணையதளமான Facebook-ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம். 

நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது. குரோம் உலாவியில் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.

இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை. பேஸ்புக்கில் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும்.

ஆனால் இனி எந்த விளம்பர தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை. ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

Wednesday 27 July 2011

MPT FORCEன் எதிரொலி ரஹ்மத் நகர் சிமென்ட் சாலை போடும் பனி நிறைவடைந்தது

முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் அருகில் மன்சூர் நகரில் கடந்த ஏழு மாதத்திற்கு  முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிமென்ட் சாலை போடும் பனி பாதியிலே நிறுத்திவைக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.  




இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நமது வெப் சைட்டில் (MPT FORCE now MUTUHPET TODAY) வெளியிடப்பட்ட செய்தி மற்றும் நேரில் சென்றுநிர்வாகிகளிடம் முறையிட்ட பின்னர் சிமென்ட் சாலை போடும் பணியைவிரைவாக முடித்திவிடுவோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்துமன்சூர் நகர் சிமென்ட் சாலை போடும் பனி நிறைவடைந்தது.

இந்த
செய்தி இந்த வெப்சைட்டின் புகழுக்காக அல்ல தூங்கி கொண்டிருக்கும் மக்களை விழித்து தங்களுடைய உரிமையை நிலைநாட்ட வேண்டும்என்பதற்காக..
எல்லாப்
புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!

Hard Disk தேவை இல்லை!

இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம்.  USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம்.  ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும்.  அதற்காக Portable மென்பொருள்களை நாடுவோம் அது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது பலரும் Portable இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  அதில் நான் பயன்படுத்தி பிடித்த ஒரு Portable இயங்குதளத்திர்க்கான லிங்க் இதோ.   இது மட்டும் அல்லாமல் அதில் பதிந்து பயன்படுத்த கூடிய பல புதிய Portable மென்பொருட்களை அந்த தளத்தின் வலதுபுறம் காணலாம்.  

தேவையானவற்றை பதிவிறக்கி USB Drive 'ல் பதிந்து கணினியில் பதியாமலும் பயன்படுத்தி மகிழலாம்.  இதை விட அதிக வசதிகளுடன் வேண்டும் என்றால் இந்த லிங்கில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம்.  இதில் 200 'க்கும் அதிகமான கேம் மற்றும் மென்பொருட்கள் பதிந்தே தரப்படுகிறது.  மற்றும் தேவையான போர்டபிள் மென்பொருட்களை பதிவிறக்கி பதிந்தும் பயன்படுத்தலாம்.

ஹார்ட் டிஸ்க் பிழைகளை நீக்க இலவச மென்பொருள்

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம்.  விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
 
சரி பிழை செய்திகள் எதனால் ஏற்படக்கூடும்?
Hard Disk 'ல் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.  தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்கி விடுவோம்.  நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில File 'கள்  கணினியிலேயே தங்கிவிடும்.  அந்த File 'களால் கணினியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம்.  இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.

பிறகு மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளவும்.  பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தேர்வு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.

பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பட்டன் ஐ அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும்.  பின் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்துகொள்ள வேண்டும். 

இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும்.  விண்டோஸ் 7 க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.
டவுன்லோட் செய்ய:  DOWNLOAD

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வாய்ப்பில்லை! அரசு வக்கீல்

சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைப்பெற்ற பரபரப்பான வாதத்தில் ‘‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர்  கூறினார். 
 
இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது.  ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். வரும் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக பெற்றோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள்  பாடங்களை படிக்க முடியவில்லை. குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவை ரத்து செய்யக்கூடாது’’ என்று அதில் கூறியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை நேற்று  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக ஆஜராகிய மூத்த வக்கீல் பி.பி.ராவ் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. தேசிய அளவிலான தரத்துடன் சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு வழங்க உயர்மட்டக் குழு அமைத்து இதுகுறித்து ஆராய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடபுத்தகங்கள் தரமானதாக இல்லை’’ என்றார். 

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு , சமச்சீர் கல்வியை தள்ளிவைத்ததாக கூறியுள்ளீர்கள். அதை எந்த ஆண்டு அமுல்படுத்துவோம் என்று கூறவில்லை; அதே சமயம்,  சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை கூறிவிட்டு, 2004ம் ஆண்டு  பாடப்புத்தகத்தை அமல்படுத்த திட்டமிடுவது  ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விரிவாக நாளை (இன்று) பதில் அளிப்பதாக அரசு வக்கீல் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை  தொடரும் என்று உத்தரவிட்டனர்.

ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி

நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில்(manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080:ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களை துரத்துவதற்கான உள்நாட்டு போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவரீதியிலான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளான்.

1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ப்ரெவிக் ஒதுக்கியுள்ளான்.
’இந்திய நாடு/ஹிந்து எதிர்ப்பு போராட்டம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றவேண்டும் என்ற லட்சியத்துடன் வலதுசாரி ஹிந்து தேசீயவாதத்தின் அதாவது ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அரசியல் கொள்கைகளை காவிமயமாக்கல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு இத்தகையதொரு நாட்டை உருவாக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்தகையதொரு லட்சியத்திற்காக பாடுபடும் அமைப்புகள்தாம் சனாதன இயக்கங்கள் அதாவது ஹிந்து தேசீயவாதிகள்.
ஐரோப்பாவை போல முஸ்லிம்களிடமிருந்தும், கலாச்சார மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த இவ்வமைப்புகள் ஐரோப்பாவின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவேண்டும்.

இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான். இந்தியாவுக்கு வெளியே வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களிடமிருந்தும் மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து புரிகிறது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் அதைக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என ப்ரெவிக் ஆதங்கப்படுகிறான்.

ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் வலதுசாரி இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய தேசவிரோத சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.

லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்கள் இந்தியாவில் கோயில்களை கொள்ளையடித்ததாகவும், ஹிந்துக்களை கொலைச் செய்ததாகவும் சில ஹிந்துத்துவ வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் குற்றம் சாட்டுகிறான்.

முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்(தலைவர்) எம்.எஸ்.கோல்வால்கரின்  ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது.

ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன்வைக்கிறார்.
இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

Tuesday 26 July 2011

பென்டிரைவ், சீடி/டிவீடியில் உள்ள ISO பார்மேட் பைல்களை எளிதாக உபயோகிக்க

இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் பலவும் ஐஎஸ்ஒ(ISO) போர்மட்டில் மட்டுமே இருக்கும்.
ஐஎஸ்ஒ(ISO) கோப்புக்களை நாம் போர்ட்டபிள் கோப்புக்களாக மாற்றிய பின்பு தான் பயன்படுத்த முடியும். இதனை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே போர்ட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டும். 

இவ்வாறு மாற்றிய பின்புதான் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று நம்மால் பயன்படுத்த முடியும். குறிபிட்ட ஐஎஸ்ஒ கோப்புகளின் சிறப்பம்சங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் நாம் அதை பூட்டபிள் கோப்பாக மாற்றிய பின்புதான் முடியும். 

நேரடியாக ஐஎஸ்ஒ கோப்புக்களை சோதிக்க Vmware, Virtual machine போன்ற எதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி பின்புதான் பயன்படுத்த முடியும். இவை அளவில் பெரியது ஆகும்.

மேலும் இவற்றை கணணியில் நிறுவிய பின்புதான் பயன்படுத்த முடியும். பூட்டபிள் பென்டிரைவ், சீடி/டிவீடி மற்றும் ஐஎஸ்ஒ கோப்புக்களை சோதிக்க ஒரு இலவச போர்ட்டபிள் மென்பொருள் உள்ளது. இது அளவில் சிறியது ஆகும். லைவ் சீடிக்களை நேரடியாக விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே பயன்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கொள்ளவும். பின் அந்த போர்ட்டபிள் மென்பொருளின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும். 

பின் தோன்றும் விண்டோவில் Right-Click menu என்பதை கிளிக் செய்யவும். தற்போது MobaLiveCD முழுமையாக நிறுவப்படும். பின் உங்கள் விருப்ப முறைகளை தெரிவு செய்யவும். Run the LiveCD அல்லது Run the LiveUSB என்பதை தெரிவு செய்யவும். 

பின் ஐஎஸ்ஒ கோப்புக்களையோ அல்லது லைவ் சீடியினையோ தேர்வு செய்யவும். தற்போது MobaLiveCD கோப்பு சேமிக்கப்படவேண்டிய இடத்தை தெரிவு செய்து கொள்ளவும். அவ்வளவுதான் தற்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு இயங்க தொடங்கும். நீங்கள் சீடியில் உள்ள கோப்பை தேர்வு செய்வதே சிறந்தது. 

இனி நீங்கள் இதை எளிமையாக பயன்படுத்த முடியும். Ctrl + Alt கீகளை அழுத்துவதன் மூலம் QEMU விண்டோவில் உங்களால் பயணிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள். எளிமையாக இருக்கும். இயங்குதளத்தை நிறுவ கற்றுகொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

கூகுளின் முக்கிய அறிவிப்பு: Old Version ப்ரௌசெர் ஐ பயன் படுத்த வேண்டாம் !

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் வரும் ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும் அதன் அண்மைக் காலப்பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால் அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.

http://www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி ஆகஸ்ட் 1 முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பொக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது.

இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால் கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது.

தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளுக்குக் காரணம் என்ன?
கூகுள் தன் மின்னஞ்சல், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன.
எடுத்துக்காட்டாக கோப்பு ஒன்றை அட்டாச் செய்திட கோப்பறையிலிருந்து இழுத்து அமைப்பது(drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மின்னஞ்சல் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பொக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.

இதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஓப்லைன்(Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது.

இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பொக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால் இந்த ஓப்லைன் வசதி கிடைக்காது. 

ஆனால் கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களில் இந்த ஓப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஓப்லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.

நார்வே: 93 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் எதற்க்காக தாக்குதல் நடத்தினேன் ?

நார்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற தீவிரவாத இயக்கத்தை சார்ந்த ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளான்.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 7 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில் தலைநகரின் அருகே உள்ள உடோயா தீவில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை போலீஸ் உடையில் வந்த இளைஞர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

இந்த இரு சம்பவத்துக்கும் காரணமான ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் என்ற 32 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தனது வழக்கறிஞர் கெர் லிப்பெஸ்டாட் மூலம் தெரித்துள்ள பிரீவிக் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு டவுன்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் தன்னை விசாரிக்க வேண்டும் என்ற பிரீவிக்கின் விருப்பத்தை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதுகுறித்த முடிவை நீதிபதி அறிவிப்பார் எனத் தெரிகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரீவிக்கிற்கு இரு விருப்பங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினேன் என்று தெரிவிப்பதற்காக பொதுமக்கள் மத்தியில் வைத்து தன்னை விசாரிக்க வேண்டும். 

மற்றொன்று விசாரணையின் போது போலீஸ் சீருடையில் வர அனுமதிக்க வேண்டும் என்பதாகும் எனத் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக லண்டன் முகவரியிட்ட 1,500 பக்க அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தலைவர் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு. 

 "இஸ்லாத்தை பொறுத்துக்கொள்ளும் "ஐரோப்பிய நாடுகளை கவிழ்ப்பதற்காக என்னைப் போல 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக "தி டெலிகிராப்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்த லண்டனுக்கு பிரீவிக் எப்போது வந்து சென்றான்  என்பது பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு(பா.ஜ.க) தலையிடுகிறது. இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார்.

தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

முத்துப்பேட்டையில் பலத்த மழை

முத்துப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் வருவதும் பின்பு களைவதுமாக இருந்தது இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். காரணம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயந்தனர் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

யெமனில் குண்டுவெடிப்பு:மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் பலி

அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெற்று வரும் யெமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் மரணமடைந்தனர்.

இரண்டு அதிகாரிகள், மேஜர், லெஃப்டினண்ட் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். யெமனின் கடலோர பிரதேசமான ஏடனில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்காயிதா இயக்கம் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்யான் மாகாணத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெற இருக்கவே இத்தாக்குதல் நடந்துள்ளது.

அல்காயிதா ஆதரவுப்பெற்ற போராளிகளுக்கு எதிரான போருக்கு கூடுதல் ராணுவத்தினரை அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரபு நாடுகளில் அல்காயிதாவின் செல்வாக்கு பெற்ற பகுதியாக யெமன் கருதப்படுகிறது.

யெமன் நாட்டில் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழுந்துள்ள வேளையில் தெற்கு யெமனில் போராளிகள் சவாலாக விளங்குகின்றனர். மற்றொரு சம்பவத்தில் தெற்கு யெமனின் தெய்ஸில் நடந்த மோர்ட்டார் தாக்குதலில் 25 வயதான பெண்ணும், 10 வயதான குழந்தையும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே தாக்குதலில் காயமுற்று சவூதியில் சிகிட்சைப்பெற்று வரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நாட்டிற்கு திரும்புவதை தடுப்பதற்கான முயற்சியை எதிர்கட்சியினர் துவக்கியுள்ளனர்.

இந்தியர்களின் கறுப்பு பணம் சுவிஸ் வங்கியிலிருந்து வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றம்

இந்திய அரசியல் தலைவர்கள் பலர் ஊழல் மூலம் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர்.
இதேபோல் இந்திய தொழில் அதிபர்கள் பலர் வரி ஏய்ப்பு செய்த பணத்தை அங்குள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அந்த கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாபா ராம்தேவ், அன்னாஹசாரே போன்ற சமூக சேவகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க கோரி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பாபா ராம்தேவை பொலிசார் பலவந்தமாக விரட்டி அடித்தனர். இதனால் டெல்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் கறுப்பு பணம் இருப்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் மத்திய வங்கியில் இந்தியர்கள் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்து உள்ளனர். அந்த வங்கியின் செய்தி தொடர்பாளர் வால்டர்மீர் கூறும்போது, இந்தியர்கள் 2.1 பில்லியன் டொலர்களை சேமிப்பு கணக்கில் போட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள யு.பி.எஸ். மற்றும் கிரடிட்சூசி ஆகிய வங்கிகளில் தான் அதிக பணம் டெபாசிட் செய்துள்ளனர். 

பத்திரிகைகளில் இந்தியர்கள் பல லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது துளி அளவு கூட உண்மை இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என்றார்.

இந்தியாவில் கறுப்பு பணத்தை மீட்கும் போராட்டம் வெடித்திருப்பதால் சுவிஸ் வங்கிகள் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்நாள் வரை இந்திய அரசியல் தலைவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதையும் அங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அவற்றை அந்த வங்கிகள் அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வட்டிக்கு பணம் வழங்கி வந்தது. இதன்மூலம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து வந்தன. 

தற்போது இந்தியர்கள் பணம் குறைந்து வருவதால் அந்த வங்கிகள் கலக்கம் அடைந்துள்ளன. கடந்த 2008 ம் ஆண்டு இந்தியர்கள் 3 பில்லியன் டொலர்களை சுவிஸ் வங்கியில் செலுத்தினர். 2009 ல் அது 2.7 பில்லியன் டொலர்களாக குறைந்தது. 2010 ல் 2.5 பில்லியன் டொலராக (ரூ.11,000 கோடி) குறைந்துள்ளது.

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டால் தாங்கள் பணம் பறிபோய்விடுமே என்று இங்குள்ள தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் அவசர அவசரமாக சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை எடுத்து சிங்கப்பூர், மொரீசியஸ், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். 

இந்திய தலைவர்கள் கறுப்பு பணத்தை டெபாசிட் செய்ய மொரீசியஸ் நாடு மிகவும் ஆர்வம் காட்டுகிறது. இந்த கறுப்பு பணத்தை கொண்டு அந்நாட்டில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்னேற முடியும் என்று அந்நாட்டு தலைவர்கள் கருதுகிறார்கள். இதனால் இந்திய தலைவர்களுக்கு சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகள் தொடர்ந்து வலைவிரித்து வருகிறார்கள்.

ஹர்ட் டிஸ்க்கை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கு

கணணியில் Operating System நிறுவும் போதே தனித்தனி பகுதிகளாக ஹர்ட் டிஸ்க்கை பிரித்திருப்போம். ஒரு சிலர் Operating System நிறுவும் போது முறையாக ஹர்ட் டிஸ்க்கை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள்.

அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது.
எனவே ஹர்ட் டிஸ்க்கை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. ஹர்ட் டிஸ்க்கை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆபரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. 

ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. ஹர்ட் டிஸ்க்கை முறையாக பிரிக்கவும், பிரித்த ஹர்ட் டிஸ்க்கில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager. 

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி ஹர்ட் டிஸ்க்கை முறைப்படுத்தி கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும்.

மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 24 July 2011

MPT FORCE வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது ?

அஸ்ஸலாமு அழைக்கும்...

அன்புள்ள முத்துப்பேட்டை
MUTHUPET FORCE
ன்  வாசகர்களே..!
குறைந்த காலத்தில் அதி வேகத்தில் வாசகர்களை தக்கவைத்து வைத்தும், வாசகர்களின் என்னத்தை புரிந்தும் அவர்களுக்கேட்ப முத்துப்பேட்டை செய்திகளை உடனுக்குடன் அளித்த MUTHUPET FORCE இப்பொழுது ஹேக்கர்களால் அந்த வெப் சைட் முடக்கப்பட்டுள்ளது. வாசகர்களாகிய உங்களுக்காக MUTHUPET FORCE வெப் சைட் ஐ திரும்ப பெற
கடந்த இரண்டு வாரங்களாக எவ்வளவோ போராடியும் திரும்ப பெற முடியவில்லை.






ஆகையால் மீண்டும் இறைவனின் கிருபையால் MUTHUPET FORCEக்கு பதிலாக MUTHUPET TODAY என்ற வெப்சைட்டை துவங்கி உள்ளேன். MUTHUPET FORCEக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தீர்களோ அதை விட அதிகமான ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் உயிர்த் தெழுந்திருக்கிறது MUTHUPET TODAY.இப்பணி சிறக்க இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள.

அன்புடன்,
MUTHUPET FORCE TEAM

ஐபோனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றுவதற்கு

ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போன் தற்போது அனைத்து மக்களிடமும் பிரபலமாகி வருகிறது. சேவைகளுக்காக பலவிதமான அப்ளிகேசன்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளது.

இதில் வாய்ஸ்மெயிலை(Voice Mail) -ஐ படிக்ககக்கூடிய(Readable Text) ஆக மாற்றிக்கொடுக்க YAP Voicemail என்ற அப்ளிகேசன் உதவுகிறது.
தட்டச்சு செய்ய நேரம் இல்லாத நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை வாய்ஸ்மெயிலாக மாற்றி அனுப்புவோம். இப்படி நாம் அனுப்பும் மற்றும் பெறும் வாய்ஸ்மெயில் செய்தியை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றத் தான் இந்த YAP அப்ளிகேசன் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் ஐபோனில் வேண்டும் என்றால் Available on the App Store என்பதிலும், ஆண்டிராய்டு என்பதில் வேண்டும் என்றால் Available on the Android Market என்பதையும் சொடுக்கி Yap Voicemail நிறுவலாம். 

இனி உங்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற கடினம் இல்லாமல் நமக்கு வரும் ஓடியோ செய்தியை அப்படியே படிக்கக்கூடிய செய்தியாக இந்த அப்ளிகேசன் மாற்றிக் கொடுக்கிறது.

தொடக்கக் கல்வியின் தரமே இந்தியாவின் எதிர்காலம்! கலாம்!

தொடக்கக் கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். ஆரம்பக் கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.  படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்பக் கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
மேலும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்துப் படிக்கும் வகையிலும், தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்றார்.


மேலும், லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அவசியம். அதன்படி, சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, பயங்கரவாதம்,  ஊழல்,  இந்திய-பாகிஸ்தான் உறவு ஆகியவை குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதிலளித்தார்.

நார்வே இரட்டைக் கு​ண்டுவெடிப்​பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது

நார்வேயில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது. உட்டோயா தீவில் போலீஸ் வேடத்தில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 84 பேரும் தலைநகரான ஓஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் நடந்த குண்டுவெடிப்பில் எட்டுபேரும் மரணித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரவிக் என்ற 32 வயது பயங்கரவாதி உட்டோயாவில் கைதுச் செய்யப்பட்டுள்ளான். குண்டுவெடிப்பின் பின்னணியில் இவன்தான் செயல்பட்டுள்ளான் என போலீஸ் கருதுகிறது. தீவிரவாதியை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

உட்டோயா தீவில் ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவினர் நடத்திய முகாமில் அத்துமீறி நுழைந்த இந்த தீவிரவாதி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தான். 84 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் மரணித்துள்ளனர் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. தீவிரவாதியை கைதுச் செய்தபிறகு நடந்த தேடுதலில் 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆன்லைனில் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை பிரசுரிப்பவன் தான் கைதுச் செய்யப்பட்ட தீவிரவாதி என போலீஸ் கமிஷனர் ஸ்பீனங் ஸ்பான்ஹிம் அறிவித்துள்ளார். வலதுசாரி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள இவன் சொந்த பெயரில் இரண்டு ஆயுதங்களை வாங்கியுள்ளான் என ஒரு தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் கிறிஸ்தவ பழமைவாதி என தன்னை சுயமாக அறிமுகப்படுத்தியுள்ளான். இவன் வேட்டையாடுதல் மற்றும் கம்ப்யூட்டர் கேமிலும் விருப்பமுள்ளவன் என நார்வே நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

எங்கோ ஒரு இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டாலே முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதம் என கூச்சலிடும் மேற்கத்திய ஊடகங்கள் நார்வேயில் நடந்த சம்பவத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றன. பி.பி.சியில் வலதுசாரி கிறிஸ்தவர் என்ற வார்த்தைதான் இடம் பெற்றிருக்கிறதே தவிர தீவிரவாதி என்ற வார்த்தையை செய்தியில் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பி.பி.சி செய்தி லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சிறுவர்களுக்கான வீடியோ தளம்

பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி மிகசிறந்த பொழுதுபோக்கு வீடியோ பார்த்தல்.ஆகும் குழந்தைகள் கணினியில் வீடியோ கட்சிகளை பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கென பிரத்தியேக தளமாகமாகவும்.
 சிறுவர்கள் குழந்தைகள் பார்த்து மகிழ்வதற்காக அவர்களுக்கு ஏற்றால் போல பல வீடியோ கட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது Kideos.com.








 
இந்த தளத்தில் சிறுவர்களின் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப இங்கு வீடியோ
 காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் காட்டூன் மற்றும் சிறுவர்கள் குழந்தைகளின் சுவையான வீடியோ காட்சிகள், சிறுவர்களுக்கான திரைப்படங்களில் இருந்து கத்தரிக்கப்பட்ட காட்சிகள் என பல ஏராளமான வீடியோ தொகுப்புக்கள் இங்கு உள்ளன .


 
இங்குள்ள வீடியோ காட்சிகளை பெரியவர்கள் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது குழந்தைகளின் கள்ளங்கபடமில்ல செயற்பாடுகள் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும். அத்துடன் நீங்கள் ரசிக்கும் வீடியோ கட்சிகளை சமூகவலைத்தளங்களில் பகிர முடியும் .

முகவரி:  www.kideos.com

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்

குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் சில பலவீனங்களினால் ஹதீஸின் சில வாசகங்கள் விடுபட்டு, அல்லது மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அறிஞர்களால் ஒப்பீட்டாய்வின் மூலம் திருத்தப்பட்டுமுள்ளன. அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தை அறியாத அறிவிலிகளும் சுயநலவாதிகளும் ஹதீஸ் என்ற பெயரில் போலியான செய்திகளை இட்டுக்கட்டி நபியவர்களின் பெயரில் பரப்பினர்.
இவ்வாறு பரப்பப்பட்ட ‘மவ்ழூ’ஆன (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களின் விபரமும் திறணாய்வுக்கலை அறிஞர்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டன. எனினும் ஹதீஸ் கலையுடன் அதிக தொடர்பு அற்ற உலமாக்கள் தமது உரைகளுக்கு அழகு சேர்ப்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு அறிவிப்புக்களை மக்கள் மத்தியில் பரப்பி அவற்றுக்கு ஒரு பிரபலத்தையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

‘என்மீது யார் நான் கூறாததை வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறுகின்றாரோ அவர்; தனது தங்குமிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்’ என்ற கருத்தில் வந்துள்ள ஏராளமான அறிவிப்புக்கள் குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லை.
‘ராவிகள்’ எனப்படும் ஐந்து இலட்சம் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் வாழ்வை ஆராய்ந்து ‘இட்டுக்கட்டப்பட்டன’ என இமாம்கள் ஒதுக்கி இருப்பவற்றை நாம் மீண்டும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோமே என்ற கவலையும் இவர்களுக்கில்லை.
இத்தகைய போலி ஹதீஸ்கள் மக்கள் மன்றத்தில் பரவி பல்வேறுபட்ட சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை மிகச் சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அகீதா ரீதியிலான சீரழிவுகள்:
இஸ்லாமிய அடிப்படையான அகீதாவுக்கே வேட்டுவைக்கும் பல்வேறு போலிபோலி ஹதீஸ்களையே ஆதாரங்களாக முன்வைக்கின்றனர்.
ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. இஸ்லாமிய அகீதாவுக்கு நேர் முரணான அத்வைத, சிந்தனைகளைப் பேசுவோரும் தமது வாதத்திற்குப் பல்வேறுபட்ட
‘யார் தன்னை அறிந்து கொண்டானோ அவன் தனது இரட்சகனை அறிந்து கொண்டான்’
இது எத்தகைய அடிப்படையுமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அறிஞர் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனது ‘தய்லுல் மவ்ழூஆத்’ எனும் நூலிலும் (263), ஷெய்க் முல்லா அலிகாரி(ரஹ்) தனது ‘மவ்ழூஆத்’எனும் நூலிலும் இதை இடம்பெறச் செய்துள்ளனர்.

இவ்வாறே ‘நான் அறியப்படாத பொக்கிஷமாக, புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனது படைப்புக்களைப் படைத்தேன்’ என அல்லாஹ் கூறுவதாக இடம்பெறும் இட்டுக்கட்டப்பட்டஇட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். (பார்க்க : ஸில்ஸிலதுல் அஹாதீதுல் ழயீபா வல்மவ்ழூஆ, எண்: 66)
செய்தியும், அத்வைதம் பேசுபவர்களால் பெரிதும் ஆதாரமாக எடுத்துப் பேசப்படுகின்றது. ஆனால் இது
இவ்வாறே, ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டதாக வாதிட்டு, ‘காதியானி’ மதத்தை தோற்றுவித்த மிர்சா குலாம் அஹ்மத் எனும் பொய்யனைக் காதியானிகள், மஹ்தியாகவும், மஸீஹாகவும் சித்தரிக்கின்றனர். இவர்கள் தமது தவறான வாதத்திற்கு ‘ஈஸா(அலை) அன்றி மஹ்தி வேறில்லை’ என்ற இப்னுமாஜாவில் இடம்பெறும் ஹதீஸையே எடுத்து வைத்துள்ளனர். இது ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள அறிவிப்பாகும். இமாம் இப்னுல் கையும் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தமது ‘அல்வாஹியாத்’ என்ற நூலிலும் (1447) அறிஞர் ஷெளகானி தமது ‘அஹாதீதுல் மவ்லுஆத்’ என்ற நூலிலும் இடம்பெறச் செய்து இதன் போலித் தன்மையைத் தெளிவுபடுத்தியுள்ளனர். (பார்க்க: ஸில்ஸிலா 1ஃ175-176, எண்: 77)

தவஸ்ஸுல்:
அல்லாஹ்விடம் நாம் நேரடியாகவே பிரார்த்திக்க வேண்டும். இந்த அமைப்பில்தான் அல்குர்ஆனில் இடம்பெறும் அனைத்து துஆக்களும் அமைந்துள்ளன. ஆனால் சிலர் அன்பியாக்கள், அவ்லியாக்கள் பொருட்டால் பிரார்த்திக்கின்றனர். இந்த வழிகெட்ட நிலை தோன்றுவதற்கும் பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்களே காரணமாக அமைந்தன.

‘என் பொருட்டால் நீங்கள் வஸீலாக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ்விடத்தில் எனது அந்தஸ்த்து மகத்துவமானதாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எவ்வித அடிப்படையும் இல்லாத போலி ஹதீஸ் ஒன்று மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டார்கள் என்கின்ற அல்குர்ஆனுக்கு முரணான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பும் ‘பொருட்டால்’ பிரார்த்திப்பதற்கான வலுவான ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் மக்கள் மத்தியில் இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் பிரார்த்தித்தல், அவர்களுடைய நினைவு தினங்களைக் கொண்டாடுதல், அதனை ஒட்டி கந்தூரிகள், நேர்ச்சைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான செயல்பாடுகள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பதைக் காணலாம்.

சுன்னா – மறுப்பு:
கடந்த காலத்தில் சில தனிப்பட்ட சிலரும், நவீன காலத்தில் சில குழுக்களும் சுன்னாவைப் பின்பற்ற முடியாது; குர்ஆன் ஒன்றே போதும் என்று வாதிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை அஹ்லுல் குர்ஆன் என அறிவித்துக் கொள்கின்றனர். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் உருவாவதற்கு போலிஹதீஸ்களே காரணமாக அமைந்தன.

இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்துள்ளன. அதேபோல் அவை பகுத்தறிவுக்கும் பொருத்தமற்றவையாக அமைந்துள்ளன. இதேவேளை அவை ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளைக் காணும் சிலர் ஒன்றுக்கொன்று முரண்படும் இவை இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது என எண்ணுகின்றனர். ஆதலால் முரண்பாட்டுக்கு அப்பாற்பட்ட குர்ஆனை மட்டும் பின்பற்றினால் போதும் என வாதிக்கின்றனர். இந்த அகீதா ரீதியான சீர்கேடு உருவாவதற்குப் போலி ஹதீஸ்களும் அவை தொடர்பான அறிவு அற்றுப்போனமையுமே காரணமாக அமைந்துள்ளன. இது தொடர்பாக அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தமது ‘இர்வாஉல் ஙலீலின்’ முன்னுரையிலும் அறிஞர் அபூ அப்துல்லாஹ் லாகிர் நிஃமதுல்லாஹ் அவர்கள் தமது ‘அல் அஹாதீதுழ் ழயீபா வல் மவ்லூஆ வஹதருஹா அஸ்ஸெய்யிஉ அலல் உம்மா’ என்ற சிற்றேட்டிலும் உதாரணங்களுடன் விபரித்துள்ளனர்.

வணக்க வழிபாடுகள்:
அகீதாவில் பல்வேறுபட்ட சீரழிவுகளுக்கு போலி ஹதீஸ்கள் காரணமாக இருந்தது போலவே வணக்க வழிபாடுகளில் பல்வேறுபட்ட சுன்னாவுக்கு முரணான நிலைப்பாடுகள் தோன்றவும், பித்அத்கள் உருவாகவும் போலி ஹதீஸ்கள் துணை நின்றன. அவற்றுக்குச் சில உதாரணங்களை நோக்குவோம்.

கருத்து வேறுபாடு அருளாகுமா?:
‘இமாம்களின் கருத்து வேறுபாடு சமுகத்திற்கு அருளாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஒன்று பரவலாக மார்க்க அறிஞர்களால் பேசப்படுகின்றது. இவ்வாறே ‘எனது உம்மத்தின் கருத்து வேறுபாடு அருளாகும்’ என்ற ஒரு செய்தியும் உண்டு.
இமாம் “அப்துல் பர்” அவர்கள் கூறியதாக அல்மனாவி அவர்கள் இந்தச் செய்திப் பற்றி கூறும்போது இப்படி ஒரு ஹதீஸ் அறிஞர்களிடத்தில் அறியப்பட்டிருக்கவில்லை. இதற்கு ஸஹீஹானதோ, ழயீபானதோ, மவ்லூஆனதோ எந்த வகையான சனதும் (அறிவிப்பாளர் தொடரும்) இல்லை என்கின்றார்.

எந்தச் சனதும் இல்லாத இந்தச் செய்தியை இமாம் சுயூத்தி தனது ‘அல்ஜாமிஉஸ் ஸகீரில்’ இது எம் கைக்குக்கிட்டாத ஏதாவதொரு கிதாபிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி நியாயப்படுத்த முற்படுகின்றார். போலி ஹதீஸை உறுதிப்படுத்த முயலும் இமாமவர்களின் இக்கூற்று பல்வேறுபட்ட ஸஹீஹான ஹதீஸ்கள் கூட முஸ்லிம் உலகத்தால் இழக்கப்பட்டுவிட்டன என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகின்றது.
இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) தமது ‘அல் இஹ்காம் பீ உஸுலில் அஹ்காம்’ எனும் நூலில் (5ஃ64) இந்த செய்தி பற்றிக் கூறும்போது, ‘இது தவறான கருத்தாகும். கருத்து வேறுபாடு அருளாக இருந்தால் கருத்து ஒற்றுமை என்பது அருள் அற்றதாக மாறிவிடும். இப்படி ஒரு முஸ்லிம் கூற முடியாது!’ என்பதாகக் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல்வேறுபட்ட அறிஞர்களால் இச்செய்தி விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் சரியானதை இனங்கண்டு பின்பற்றுவதை விட்டுவிட்டு தக்லீதின் அடிப்படையில் நடந்து கொள்வதற்கும், மத்ஹபுகளைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் இத்தகைய போலி ஹதீஸ்கள் மக்களை இட்டுச் சென்றுள்ளன. இதனால் எல்லா இபாதத்துகளிலும் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதையே மக்கள் அருளாக எண்ணி ஏற்றுக்கொண்டு செல்கின்றனர்.

நபி வழிகள் மறுக்கப்படல்:
சில இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் நேரடியாகவே சுன்னாவுக்கு முரணாக இருக்கும். பெரும்பாலும் தமது மத்ஹபுடைய இமாமின் கூற்றுக்கு வலு சேர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டிருக்கும். இவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் அந்தந்த மத்ஹபைப் பின்பற்றுபவர்களால் பிரபலமடையச் செய்யப்பட்டிருக்கும். இதன் தாக்கத்தால் பல சுன்னத்தான அமல்கள் சமூகத்தில் மங்கி மறைந்து போயுள்ளன.

‘வெள்ளிக்கிழமை தினம் இமாம் குத்பா ஓதும் போது உங்களில் ஒருவர் வந்தால் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
தொழாமல் அமர்ந்துவிட்டவரைக்கூட எழுந்து தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் தமது குத்பாவின் போது கூறியுள்ளார்கள். இதன்படி இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் பள்ளிக்கு வருபவர் இரண்டு ரக்அத்து தொழுதுவிட்டுத்தான் பள்ளியில் அமர வேண்டும். ஆனால்,
கதீப் மிம்பரில் ஏறிவிட்டால் தொழுகையும் கிடையாது, பேசவும் கூடாது என்ற கருத்தில் பலவீனமான அறிவிப்பு ஒன்று உள்ளது. இந்தச் செய்தி பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் மாட்டப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வருபவர்கள் தொழாமலே இருந்து விடுகின்றனர். மாறாக யாரேனும் தொழுதால் சில இமாம்கள் அவரை அப்படியே இருக்குமாறு நேரடியாகவே ஹதீஸுக்கு முரணாகக் கூறுகின்றனர். நபியவர்கள் இருந்தவரையும் தொழச் சொல்லியுள்ளார்கள். இவர்கள் தொழுத பலரையும் தொழுகையை விட்டுவிட்டு அமரச் சொல்கின்றனர். இந்நடவடிக்கைக்கு போலி ஹதீஸே காரணமாகியுள்ளது.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அய்யூப் இப்னு நுஹய்க் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் குறித்து, இமாம் அபூஹாதம் ‘அல்ஜரஹ் வத்தஃதீல்’ எனும் நூலில் (1/1/259) அவரது அறிவிப்புக்கள் மறுக்கப்படும் என்றும், அறிஞர் அல் ஹைதமி ‘அல் மஜ்மஉ’வில் (2/184) இவர் விடப்பட்டவர் என்றும், அறிஞர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ‘பத்ஹுல் பாரி’யில் (2/327) இது பலவீனமான அறிவிப்பு என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறான பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் மூலம் நேரடியாக சுன்னாவுக்கு முரணான நிலைப்பாடு சமூகத்தில் மார்க்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

இபாதத்துக்கள் புறக்கணிக்கப்படுதல்:
சில இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் ஒரு இபாதத்தை விட அடுத்த இபாதத்தை உயர்வுபடுத்திப் பேசுவதாக அமைந்து விடுகின்றன. இதனால் பாதிக்கப்படும் சிலர் குறிப்பிட்ட சில வணக்கங்களைச் செய்துவிட்டு அடுத்த இபாதத்துக்களைப் புறக்கணிக்கின்றனர். உதாரணமாக திக்ர் குறித்த சில இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் அதில் அதீத ஈடுபாட்டையும் தொழுகை போன்ற அமல்களில் கூட பொடுபோக்கையும் ஏற்படுத்தி விடுகின்றது. சிலர் தொழுவதே திக்ருக்காகத்தான். எனவே குறிப்பிட்ட திக்ருகளைச் செய்துவிட்டால் தொழவேண்டிய அவசியம் கிடையாது என எண்ணுகின்றனர். இத்தகைய நிலையைத் தோற்றுவிக்கும் அறிவிப்புகளுக்கு;
சிந்திப்பது அரைவாசி இபாதத்தாகும். குறைந்த உணவு என்பதும் இபாதத்தாகும். (ஸில்ஸிலா 1/249) என்ற எவ்வித அடிப்படையுமற்ற பாதிலான செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

முக்கியமற்றவை முக்கியத்துவம் பெறுதல்:
சில செயற்பாடுகள் ஆகுமானவையாக அமைந்தாலும், ஷரீஆவின் அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றிருக்காது. ஆனால், போலியான செய்திகளில் அவற்றின் சிறப்புக்கள் பற்றி ஏராளமாக மிகைப்படுத்திக் கூறப்பட்டிருக்கும். இதனால் இஸ்லாம் முக்கியத்துவப்படுத்தாத பல செயற்பாடுகள் மிகக் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதையும் அது வலியுறுத்தும் உண்மையான ஷரீஆ ஓரங்கட்டப்படுவதையும் அறியலாம்.
‘தலைப்பாகையுடன் தொழப்படும் ஒரு ரக்அத்து தலைப்பாகை இல்லாமல் செய்யப்படும் 70 ரக்அத்துக்களை விட சிறந்ததாகும்.’

‘தலைப்பாகையில் தொழும் தொழுகை 10 ஆயிரம் நன்மைக்கு சமமாகும்.’
என்ற கருத்தில் பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உள்ளன. இச்செய்திகளை விமர்சிக்கும் இமாம் அல்பானி அவர்கள் தலைப்பாகையுடன் தொழுவதற்குக் கிடைக்கும் கூலி ஜமாஅத்துடன் தொழப்படும் தொழுகைக்கு சமமானது என்று கூறுவது கூட அறிவுக்குப் பொருந்தாது. ஆனால் இங்கு பன்மடங்கு பெருக்கிக் கூறப்பட்டுள்ளது. ஜமாஅத்து தொழுகைக்கும் தலைப்பாகைக்கு மிடையில் சட்டத்தில் கூட பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. தலைப்பாகையை பொறுத்தவரையில் ஆகக்கூடியது (அதிகபட்சம்) அதனை முஸ்தஹப்பு எனலாம். இது இபாதத்துக் கிடையாது. ஆதத்தின் (வழக்காறின்) அடிப்படையில் வந்ததாகும். ஜமாஅத்துத் தொழுகையைப் பொறுத்தவரை ஆகக்குறைந்தது அது கட்டாய சுன்னத்தாகும். அது தொழுகையின் ருக்னுகளில் ஒன்று; அது இன்றி தொழுகை செல்லாது என்றும் கூறப்படுகின்றது. உண்மை என்னவென்றால் அது பர்ழாகும், தனியாகத் தொழுதாலும் தொழுகை சேரும். ஆனால் ஜமாஅத்தை விடுவது குற்றமாகும்.
இப்படி இருக்கும் போது ஜமாஅத்துத் தொழுகைக்கு கிடைப்பதை விட தலைப்பாகையுடன் தொழுவதற்கு அதிக நன்மை கிடைக்குமென்று எப்படிக் கூற முடியும்?. (பார்க்க ஸில்ஸிலா 1/253)
இவ்வாறான போலி ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பரவி தலைப்பாகை போன்ற முக்கியத்துவமற்ற விடயங்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தன. இதனால் சிலர் தலைப்பாகை கட்டாத இமாமைப் பின்தொடர்ந்து தொழமாட்டோம் என அடம்பிடித்தனர். சிலர் பள்ளியில் பணிபுரியும் உலமாக்களுக்கு இதைக் கட்டாயமாக்கினர். மற்றும் சிலர் தலைப்பாகை கட்டினர். அதேநேரம் அதைக் கடைப்பிடிக்காத உலமாக்களை ஹதீஸைப் பின்பற்றாதவர், அதிக நன்மையில் நாட்டம் இல்லாதவர். சுன்னாவை கைவிட்டவர் என்று ஏளனமாகப் பார்த்தனர். சிலவேளை இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் தலையை மூடாத போதுகூட கோபப்படாத அளவுக்கு தலைப்பாகை இல்லாத இமாம்கள் மீது கோபப்பட்டனர்.
இவ்வாறே ஹஜ்ஜில் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது வலியுறுத்தப்படாத சுன்னாவாகும். ஆனால் ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் கையாகும். அதைத் தொட்டவர் அல்லாஹ்வுடன் முஸாஹபா செய்தவராவார் என்ற மவ்லூஆன செய்தி மக்கள் மத்தியில் அதனை மிக முக்கிய சட்டமாக மாற்றிவிட்டது. அதன் விளைவை வருடா வருடம் ஹஜ்ஜில் அனுபவித்து வருகின்றோம்.
‘யார் ஹஜ்ஜு செய்துவிட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவன் என்னைப் புறக்கணித்து விட்டான்.’ என்ற கருத்தில் ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் உள்ளன. உண்மையில் ஹஜ்ஜுடன் மதீனாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் ஹஜ் செய்யச் செல்லும் பல பாமர ஹாஜிகள் நபி(ஸல்) அவர்களது கப்ரை ஸியாரச் செய்வதைத்தான் அடிமனது ஆசையாக உள்ளத்தில் ஏந்திச் செல்கின்றனர். ஹஜ்ஜுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத கப்று ஸியாரத் ஹஜ்ஜின் முக்கிய அம்சம் போல் மாறிவிட்டது. இவ்வாறான ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

மூட நம்பிக்கைகள்:
போலி ஹதீஸ்கள் பல்வேறுபட்ட மூட நம்பிக்கைகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டன.
‘அழகிய பெண்ணின் முகத்தைப் பார்ப்பதும் பச்சைக் காட்சிகளைக் காண்பதும் கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.’ என்றொரு போலி ஹதீஸ் உண்டு. இது, பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும் குர்ஆனின் கட்டளைக்கு நேரடியாக முரண்படுவதைக் காணலாம்.
‘பணக்காரர்கள் கோழியை எடுக்கும்போது அந்த ஊரை அழித்துவிட அல்லாஹ் கட்டளையிடுவான்’ என்ற செய்தி இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ள இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும். (ஸில்ஸிலா 119)
இவ்வாறே ‘நீங்கள் கம்பளி ஆடையை அணியுங்கள்’ என்பவை போன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் கம்பளி அணிவது இறையச்சத்தின் வெளிப்பாடு என்ற நிலையை ஏற்படுத்தியது.
‘ஒருவர் அஸருக்குப் பின் தூங்கி அவரது அறிவு கெட்டுப்போனால் அவர் தன்னைத் தவிர பிறரை குறைகூற வேண்டாம்.’ என்ற செய்தி அஸருக்குப் பின் தூங்கினால் பைத்தியம் உண்டாகும் என்று கூறுகின்றது.

தேசியவாத சிந்தனை:
இஸ்லாமிய உலகைச் சிதைத்து, உஸ்மானிய்ய கிலாஃபத்தை உடைத்ததில் பெரும் பங்கு தேசியவாத சிந்தனைக்குண்டு. பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் மொழி, பிரதேச, தேசியவாத வெறி உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
சிலர் குறிப்பிட்ட இடங்களைச் சிறப்பித்து போலி ஹதீஸ்களை இட்டுக்கட்டினர். மொழி வெறி பிடித்த சிலர் அவரவர் பேசிய மொழிகளைப் புகழ்ந்து இட்டுக் கட்டினர். இவை மொழி, பிரதேச வேறுபாட்டை உருவாக்கியது. இதேவேளை, தேசியவாத சிந்தனைகளை நியாயப்படுத்தக்கூடிய ஒரு செய்தி உலமாக்களாலும் குறிப்பாக அரசியல் தலைவர்களாலும் பரவலாகப் பேசப்படுகின்றது.

‘தாய்நாட்டை நேசிப்பது ஈமானில் உள்ளதாகும்.’ (ஸில்ஸிலா 36) என்பதே இந்த இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும். இதுபோன்ற செய்திகள் மார்க்கத்தின் பெயரிலேயே தேசியவாத சிந்தனைகள் தலைதூக்க உதவின.
இவ்வாறு நோக்கும் போது போலி ஹதீஸ்கள் முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை அறியலாம். இந்த சமய சமூக ரீதியிலான பாதிப்புக்களிலிருந்து சமூகத்தைக் காப்பதற்காக போலி ஹதீஸ்களை மக்களுக்கு இனம்காட்ட வேண்டிய கடமைகள் ஆலிம்களுக்குள்ளது. தாம் எழுதும் போதும், பேசும் போதும் நபி(ஸல்) அவர்கள் பெயரில் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை மக்கள் முன்வைத்து விடக்கக்கூடாது என்ற அக்கறையும் அவதானமும் அவசியம் ஆலிம்களிடம் இருந்தாக வேண்டும். ஹதீஸ் என்ற பெயரில் கிடைப்பதையெல்லாம் மக்கள் மன்றத்திற்கு போட்டுவிடுவது ஹதீஸ்களின் தூய்மையைப் பாதுகாக்கப் பாடுபட்ட இமாம்களினதும், அறிஞர்களினதும் தியாகங்களை உதாசீனம் செய்வதாகவே அமைந்துவிடும். இது உலமாக்களுக்கு அழகல்ல. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட உலமாக்கள் முன்வருவார்களா?


எழுதியவர்/பதிந்தவர்/உரை

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More