சற்றுமுன்

Sunday 24 July 2011

குலாம் நபி ஃபாயி கைது: கஷ்மீரில் முழு அடைப்பு

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்டுள்ள குலாம் நபி ஃபாயியின் கைதை கண்டித்து ஹுர்ரியத் மாநாட்டுக்கட்சி அழைப்பு விடுத்த முழு அடைப்பில் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

215777-GhulamNabiOnline-1311409962-571-640x480பள்ளிக்கூடங்களும், வியாபார நிறுவனங்களும் பூட்டிக்கிடந்தன. அரசு பேருந்துகள் ஓடவில்லை. ஸ்ரீநகருக்கு வெளியே சில தனியார் வாகனங்கள் சர்வீஸ் நடத்துகின்றன. கடந்த ஜூலை 19-ஆம் தேதி 62 வயதான ஃபாயி கைதுச் செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இவருடைய வீட்டிலிருந்து ஃபெடரல் போலீஸ் கைதுச்செய்தது. ஐ.எஸ்.ஐயின் விருப்பங்களை கஷ்மீரில் நிறைவேற்ற இவர் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More