சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Wednesday 31 August 2011

முத்துப்பேட்டை பெருநாள் கொண்டாட்ட புகைப்படம்

அல்லாஹ் வின் மாபெரும் கிருபையால் ஈதுல் அல்ஹா எனும் நோன்பு பெருநாள் தொழுகையை முத்துப்பேட்டையிலுள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு பகுதி போட்டோவை பாருங்கள்.

ஆசாத் நகர் ஜும் ஆ மஸ்ஜித்... 


ரஹ்மத் பள்ளியில்... 











Tuesday 30 August 2011

முத்துப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டம்

தமிழகத்தின் பல பகுதிகளில் பெருநாள் பிறை தென் பட்டதால் முத்துப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது நகரின் பல பள்ளிவாயில்களில் தக்பீர் முழக்கம் கேட்டவண்ணம் உள்ளன.
கடை வீதிகளில் மக்கள் வெள்ளத்தினை காணமுடிகிறது கசாப்கடைகளில் மக்கள் முண்டியடித்து கறி வாங்குகிறார்கள் . வழக்கம்போல் அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாளை இன்ஷா அல்லாஹ்  பெரு
நாளுக்கான தொழுகை  நேரம் மற்றும் இடங்களை ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
முத்துப்பேட்டை டுடே வாசகர்கள் அனைவருக்கு இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!




முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

முஸ்லீம்களுக்கு மட்டும் ஆளுநர் தனது மாளிகையில் ரம்ஜான் விருந்து அளிக்கும் போது இந்துக்களுக்கும் தீபாவளி விருந்து அளிக்கலாமே என இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து ராம கோபாலன் கூறியதாவது, புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடந்த முதல் கூட்டத் தொடரில், புதுச்சேரியை சித்தர்கள் வாழும் ஆன்மீக பூமி என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ள நிலையில், அந்த சிறப்பை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள கோவில்களை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள கட்டண வழிபாடுகளை நீக்க வேண்டும். அப்படி செய்தால் முதல்வர் ரங்கசாமி வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. 

முஸ்லீம் மதக் குருக்களுக்கு உதவித் தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். அதேபோல கிராம அர்ச்சகர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். ஆண்டுத்தோறும் முஸ்லீம்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ரம்ஜான் விருந்து அளிக்கிறார். அது மதச்சார்ப்பற்ற நிலைக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு ரம்ஜான் விருந்தளிப்பது போல இந்ந்துகளுக்கும் தீபாவளி விருந்து அளிக்க வேண்டும் என்றார்.



Sunday 28 August 2011

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது

தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திட அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.  இதனால் இன்று காலை 10 மணிக்கு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
 
இதுக்குறித்து அன்னா ஹசாரே கூறும்போது;  ”இது மக்களின் வெற்றி என்றும், அரசின் அறிவுறுத்தலை தான் ஏற்றுக்கொள்வதாகவும்” கூறினார்.

லோக்பாலை மாதிரியாக வைத்து எல்லா மாநிலங்களிலும் லோகாயுக்தாவை உருவாக்க வேண்டும், கீழ்த்தட்டு வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பாலின் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும், அனைத்துப் பிரிவினருக்கும் குடியுரிமைச் சான்று வழங்கவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை அன்னா ஹசாரே முன் வைத்திருந்தார். இவை அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

மத்திய அரசு அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால் இரு அவைகளிலும் கொள்கை அளவில் அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பொது ஓட்டெடுப்புநடைபெறாது. இந்த மசோதாவைப் பரிசீலிக்கும் ஒரு நிலைக்குழுவை அரசு அமைக்கும். இந்த நிலைக்குழு மசோதாவில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்யும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இந்நிலையில் லோக்பால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை நேற்று காலை விதித்தார் ஹசாரே.
இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்றும் தொடர்ந்து பேச்சு நடத்தினார். அன்னா தரப்பு மிகவும் பிடிவாதம் பிடித்ததால், இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தத் தயார் என மத்திய அரசு திடீரென ஒப்புக் கொண்டது.

இதை அன்னா ஹசாரே தரப்பும் வரவேற்றது. மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரவால் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அனைத்து எம்பிக்களும் அவையில் இருக்குமாறு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் தங்களது எம்பிக்களையும் கூட்டணிக் கட்சி எம்பிக்களையும் கேட்டுக் கொண்டுள்ளன.

இதையடுத்து முதலில் ராஜ்யசபாவிலும் பின்னர் லோக் சபாவிலும் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு சமர்ப்பித்து குரல் வாக்கெடுப்பு (மேசயைத் தட்டி) நடத்தியது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் நகலை எடுத்துக் கொண்டு அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ் ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தார். தீர்மான நகலை அவரிடம் காட்டினார்.

இதையடுத்து அந்த நகலை கூட்டத்தினரிடம் காட்டி இந்திய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது போராட்டம் வெற்றி பெற்றதை அறிவித்தார் அன்னா ஹஸாரே. மேலும் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தான் நாளை அதாவது இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார். அதன்படி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹஸாரே.




மோடியை மீறி லோகாயுக்தாவை நியமித்தார் குஜராத் ஆளுநர்!

குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியைக் கலந்தாலோசனை செய்யாமல் அம்மாநில ஆளுநர் வெள்ளிக் கிழமையன்று லோகாயுக்தாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள லோகாயுக்தாவை நியமிக்குமாறு கோரி குஜராத் ஆளுநர் கமலா பனிவாலை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சக்திசிங் கோஹில் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக் கிழமை மதியம் சந்தித்தனர்.

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் கோஹில், ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதரிமன்ற நீதிபதி ஆர்.ஏ. மேத்தாவை லோகாயுக்தாவாக நியமித்து வியாழக் கிழமையன்று அரசாணை பிறப்பித்துள்ளதாக ஆளுநர் கமலா கூறியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். லோகாயுக்தா நியமனம் குறித்த கோப்பு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

75 வயதான மேத்தா குஜராத் உயர் நீதிமன்றத்தில் 1982ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை நீதிபதியாகப் பணியாற்றியவர். சில முறை அவர் தலைமை நீதிபதி பொறுப்பிலும் இருந்துள்ளார். குஜராத் மாநில லோகாயுக்தாவாக மேத்தாவை நியமிக்க அம்மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முகோபாத்யாயா பரிந்துரைத்தார். இவரது பரிந்துரையை காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக் கொண்டது.

மாநில லோகாயுக்தா சட்டத்தின்படி, லோகாயுக்தாவை நியமிப்பதற்கு ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் மாநில அரசு இதில் தலையிட முடியாது என்றும் கோஹில் கூறியுள்ளார்.

நீதிபதி மேத்தாவை லோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டது தொடர்பான அரசாணையை வெளியிடுமாறு பல நாள்களுக்கு முன்னரே ஆளுநர் மாநில அரசைக் கேட்டுக் கொண்டு, பின்னர் இதுகுறித்து பலமுறை நினைவூட்டல் அனுப்பியும் மாநில அரசு செயல்படாததால் ஆளுநரே நேரடியாக லோகாயுக்தாவை நியமிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் கோஹில் கூறியுள்ளார்.

ஆளுநரின் இச்செயல் சட்டத்துக்குப் புறம்பானது என்று வர்ணித்துள்ள அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ஜெயநாரயன் வியாஸ், அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஏற்படவே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் எந்த ஒரு நியமனத்திலும் அரசை மீறி செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் ஏற்படும் இரண்டாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்படும் உரசல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் குஜராத்தில் இது தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.





‘ஐரின்‘ அமெரிக்கவை தாக்கியது! 7,000 விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் சூறாவளிப்புயல் உருவானது. அதற்கு ‘ஐரீன்’ என பெயரிடப்பட்டது. அந்த புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாஷிங்டனில் இருந்து ஹோஸ்டன்வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
 
இதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நியூயார்க், வாஷிங்டன், வெர்ஜீனியா, மேரிலேண்ட் ஆகிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கு தாழ்வான பகுதியில் தங்கியிருந்த சுமார் 25 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு 7 ஆயிரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடுமுறையில் சென்று இருந்த அதிபர் ஒபாமா அதை ரத்து செய்து விட்டு உடனே வாஷிங்டன் திரும்பினார். புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் கேப் அருகே உள்ள வடக்கு கரோலினாவில் ஐரீன் புயல் கரையை கடந்தது.

சூறவளிப்புயல் மணிக்கு 500 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. அப்போது வடக்கு கரோலினா, புளோரிடா, வெர்ஜினீயா ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 6 லட்சம் பேர் இருளில் தவித்தனர். புயலுடன் பலத்த மழை பெய்ததால் இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் வீடுகளை சுற்றி சில அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்து இருப்பதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. புயல் கரையை கடக்கும் போது நியூயார்க் நகரில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் தங்கி சிசிக்சை பெற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் 200 லாரிகளில் அவசர தேவைக்கான உதவி பொருட்களை தயாராக வைத்திருக்கிறது.





குத்ஸ் தினம்: அரபுலகில் ஃபலஸ்தீன் ஒற்றுமை ஆதரவு பேரணிகள்

குத்ஸ் தினத்தில் அரபுலகம் முழுவதும் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணிகள் நடத்தி ஃபலஸ்தீன் மக்களுடன் ஒற்றுமை உணர்வை மக்கள் வெளிப்படுத்தினர்.
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் ஃபலஸ்தீன் ஆதரவு பேரணிகள் நடந்தேறின. அவாமியா நகரத்தில் இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் முழங்கப்பட்டன.

ஈரானின் முக்கிய நகரங்களிலும் ஃபலஸ்தீன் ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. டெஹ்ரானில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியதாவது: “மனித சமூகத்திற்கு அவமானம் இஸ்ரேல் ஆகும்.பொய் மற்றும் மோசடி மூலம் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. உலகிலுள்ள காலனியாதிக்க-மனித விரோத சக்திகளின் அடித்தளமே இஸ்ரேல்தான். மேற்காசியாவில் நிரந்தரமாக பீதியையும், ஸ்திரத்தன்மை இல்லாமையையும் உருவாக்கி காலனியாதிக்க சக்திகளை குடியேறச் செய்கிறது யூத நாடு” என நஜாத் கூறினார்.

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்களால் 1979-ஆம் ஆண்டு ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தும் விதமாக குத்ஸ் தினத்தை கடைப்பிடிக்க கொமைனி அழைப்புவிடுத்தார்.





வைரங்களினால் ஆன கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர்.
அவர்கள் செஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்தி வாய்ந்த டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தை விட வித்தியாசமாக ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு "புல்சர்" என பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர். அது ஒரு புதிய கிரகம் என கண்டுபிடித்தனர். 


அவை சுழலும் சிறிய நட்சத்திரங்களால் ஆனது. அவை 10 மைல் சுற்றளவுக்கு ரேடியோ அலைகளை உமிழ்கின்றன. எனவே இந்தகிரகம் வைரத்தால் ஆன பாறைகளை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது பூமியில் இருந்து 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

 

இணைய வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

கூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுசர் பல சிறப்பான வசதிகளால் வாசகர்களால் கவரப்பட்டு வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

தற்போது வளர்ச்சியில் சென்று கொண்டுள்ள ஒரே பிரவுசன் கூகுள் குரோம் தான். IE மற்றும் Firefox தன்னுடைய நிலையில் இருந்து கீழே நோக்கி சென்று கொண்டு உள்ளது. 

எளிமையும், வேகமும் இந்த பிரவுசர் இவ்வளவு தூரம் வளர காரணமாகும் மற்றும் அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகப்படுத்துவதாலும் வாசகர்கள் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர்.

எந்த ப்ரௌசரிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோம் இதன் எளிமை தான். தேவையில்லாத வசதிகளை குப்பைகளை போல் அடுக்காமல் என்ன வசதி வேண்டுமோ அதை மட்டுமே வெளியிடுவது இதன் சிறப்பு. 

இப்பொழுது இந்த பிரவுசரின் புதிய பதிப்பு வெளியிட்டு உள்ளனர். முழுக்க முழுக்க வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய பதிப்பை உருவாக்கி உள்ளனர். 

எப்பொழுதும் போல தற்போது இதை சோதனை(Beta) நிலையிலேயே விட்டுள்ளனர். குரோம் உலவியை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக இணைய வேகத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். தரவிறக்க வேகமும் அதிகரிக்கும்.





Saturday 27 August 2011

கலெக்டர் பேச்சு: முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலப்பாதை

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு விதமான கலக்கம் தான். அடிதடிகள், பஸ் உடைப்பு, கடை எரிப்பு, போலீஸ் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வது தான் நமக்கு ஞாபகம் வரும்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாகவும், ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுவதர்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ச. முனியசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   
 
சிலைகளை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். சிலை கரைப்பு ஊர்வலம்  ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டும் செல்ல வேண்டும். முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி ஊர்வலம் நடத்தப்பட உள்ளதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊர்வலம் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும். சிலைகளை ஜாம்புவானோடை தர்கா, ஆசாத் நகர் சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு, கொய்யா சந்திப்பு, ஏ எம் பங்களா, செம்படவன் காடு ரயில்வே கேட் வழியாகச் சென்று செம்படவன் காடு பாமணி ஆறு கீழ் கரையில் கரைத்திட வேண்டும்.

சிலை கரைத்து முடித்ததும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரால் ஏற்ப்பாடு செய்யப்படும் வாகனங்களில் ஏறி கிழக்கு கடற்க்கரை சாலை பைபாஸ் வழியாகச் செல்ல வேண்டும். எனவே இந்து அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று
கலெக்டர் ச. முனியசாமி அறிவுறுத்தினார்.    

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் இருந்த முத்துப்பேட்டை நகரம் இனிமேலும் எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்..! 



 

முத்துப்பேட்டையில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேலையில், முத்துப்பேட்டையில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

முன்னதாக முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலக வாயிலில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்தனர். ஆனால் போலீசார் பழைய பஸ் ஸ்டான்ட் பேரூராட்சி அலுவலகம் எதிரே உண்ணா விரதம் நடத்த அனுமதி அளித்தனர். 

வேத மூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பலர் இந்த உண்ணாவிரத போராத்தில் கலந்து கொண்டனர்.




முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி பேதியால் பரபரப்பு

முத்துப்பேட்டை அருகே தில்லை விளாகம் நடு நிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் படித்து வருகின்றனர் அதில் 80 மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

நேற்று
மதியம் வழக்கம் போல் அனைவருக்கும் சத்துணவு பரிமாறப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்டு விட்டு வகுப்புகளுக்கு திரும்பினர். இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மாணவர்கள் சிலர் திடீரென வாந்தி எடுத்தனர். ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர் இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்ப்பட்டது.

உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
 
இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 3 மணியளவில் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயக்கமாயினர். உடனே தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களை வேன் மற்றும் கார்களில் அரசு ஆசப்த்திரிக்கு அழைத்து வந்தோம். மயக்கத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.       





Friday 26 August 2011

நீதிபதியுடன் பேரம் பேசும் சங்கராச்சாரி

சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.
நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர்
முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ ‘டீல்’ நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இந்த சி.டி. உண்மையானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

அதுவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர்.

இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கத்தாஃபியை விரட்டுவது எண்ணெய்வளத்தை கைப்பற்றவே !

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் லிபியா அதிபர் கத்தாஃபிக்கு பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

லிபியாவின் அதிபராக வெனிசுலா கத்தாஃபியை மட்டுமே அங்கீகரிப்பதாக கடந்த புதன்கிழமை சாவேஸ் தெரிவித்தார்.

லிபியாவின் எண்ணெய் வளத்தில் கண்வைத்து அமெரிக்கா தனது நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. கத்தாஃபியை பதவியிலிருந்து இறக்கும் நாடகத்தின் மூலம் லிபியாவின் ஆட்சியின் கயிற்றை பற்றிக்கொண்டு அங்குள்ள பெரும் எண்ணெய் வளத்தை கடத்திச் செல்வதுதான் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் முயற்சியின் நோக்கம் என சாவேஸ் குற்றம் சாட்டினார்.




500 புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் விண்டோஸ்-மேங்கோ!

மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பேசிகளுக்கான புதியவகை மென்பொருளை இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் மற்றும் கூகில் நிருவனங்களின் அசுரவளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட், கைபேசி சந்தையில் தான் இழந்தை மீட்கும் முயற்சியில் தீவிரவாக இறங்கியுள்ளதை அடுத்து, 500 புதிய சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருமென்று மைக்ரோசாப்ட் கைப்பேசி நிறுவனத்தின் துணைத்தலைவர் டெர்ரி மியர்சன் தெரிவித்துள்ளார்.

இணைய தொடர்புக்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9, ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கூடிய 13.2 மெகா பிக்சல் துல்லியமுள்ள கேமரா,32 GB கொள்ளளவு கொண்ட நினைவகம் ஆகிய சிறப்பம்சங்களுடன் வரும் செப்டம்பரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைலுக்காக உருவாக்கப்படும் இந்த புதிய சாஃப்டுவேடுவேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் மேங்கோ என்று பெயரிட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் வருகையால் இழந்த சந்தையை மீட்டெடுக்கும் நோக்கில் தீவிரவாமக் இறங்கியுள்ள மைக்ரோசாஃப்ட்டின் அறிவிப்பு, தொழில்நுட்ப விரும்பிகளால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாஃப்டை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும், கூகிலின் ஆண்ட்ராய்டும் தங்கள் தயாரிப்புகளில் மேலும்பல புதுமைகளை புகுத்தும்பட்சத்தில் நவீன கைபேசி பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.



யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன.

ஆனால் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல போர்மட்டுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மென்பொருளின் பயன்கள்:
1. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
3. தொடர்பு வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.
4. வீடியோக்களை வேகமாக தரவிறக்கம் செய்கிறது.
5. வீடியோக்களை FLV, MP4 போர்மட்களில் பல்வேறு அளவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
6. வீடியோக்களை Preview பார்க்கும் வசதி இருப்பதால் வீடியோ நன்றாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. யூடியுப் வீடியோக்களில் இருந்து ஓடியோவை மட்டும் தனியே பிரிக்க Extract FLV audio வசதி.
8. மேலும் History, Batch போன்ற கூடுதல் வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. 

முதலில் இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அடுத்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். 

மென்பொருளில் Youtube URL இடத்தில் வீடியோவின் URL கொடுக்கவும். அதன் பின் வீடியோ தரவிறக்கம் செய்ய வேண்டிய தரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

குறிப்பிட்ட வீடியோ HD வடிவில் இருந்தால் மட்டுமே HD வடிவில் தரவிறக்கம் செய்ய முடியும் இல்லையேல் சாதரணமாக தான் தரவிறக்கம் ஆகும். அடுத்து Preview பார்க்க வேண்டுமென்றால் பார்த்து கொண்டு கடைசியில் தரவிறக்க பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் அந்த வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். 

வலது புறத்தில் பார்த்தல் இந்த வீடியோவின் Related videos காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கம் செய்ய நினைத்தால் அதன் மீது கிளிக் செய்தாலே போதும். அந்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் பொழுது தரவிறக்கத்தின் வேகம் இணைய வேகத்திற்கு ஏற்ப குறையும்.

Thursday 25 August 2011

மருத்துவ குணமுள்ள கனவாய் மீன்கள் முத்துப்பேட்டை, அதிரை கடற் பகுதிகளில்

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் கனவாய் மீன்கள் சீசன் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் மீனவர்களின் வலையில் கனவாய் மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன. கனவாய் மீன்களில் ஆக்டோபஸ்,பேபி சுருட்டி, சி எப் ஆகிய வகைகள் உள்ளன.

இந்த 4 வகை கனவாய் மீன்களும் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் கடற் பகுதிகளில் அதிகம் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனவாய் மீன்கள் வரத்து அதிகம் உள்ளதால் ஏற்றுமதியும் தீவிரமடைந்துள்ளது.

இது பற்றி முத்துப்பேட்டை மீனவர்கள் கூறுகையில்:
இந்த வகை கனவாய் மீன்கள் சாப்பிடுவதற்கு ஆட்டுக்கறி போன்று இருக்கும் மேலும் இது மருத்துவ குணமுடைய மீன்கள். இது குறுப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. இதனால் இவை ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இப்போது அக்டோபஸ் ஒரு கிலோ ரூ 60க்கும், பேபி கனவாய் ரூ 40க்கும்,  சுருட்டி ரூ 150க்கும், சி எப் ரூ 200க்கும் விற்கப்படுகிறது. 


Wednesday 24 August 2011

ரேஷன் கடத்தல்,பதுக்கல் பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம்!

தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் ரேஷன் பொருட்கள் கடத்தல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அமைச்சர் புத்தி சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து நேற்று பேரவையில் நடைபெற்ற உணவுத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய உணவுப்பொருள் வழங்கு துறை அமைச்சர் புத்திசந்திரன் அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்துக்குள் 181 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 41 ஆயிரத்து 442 புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது  4,286 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 90 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 469 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 45 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எதிர் வரும் 2011&12ம் ஆண்டில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் ஆகியவை தொடர்பாக தகவல் தருபவருக்கு வழங்கப்படும் சன்மானம் 500 ரூபாயாக உயர்த்தப்படும். போலி குடும்ப அட்டை குறித்து தகவல் தருபவர்களுக்கு 200 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக சன்மானம் வழங்கப்படும் என்றவர் மேலும் சைதாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் அலுவலகத்துக்கு 53 லட்ச ரூபாயில் சொந்த கட்டிடம் கட்டப்படும். வில்லிவாக்கம், சைதாப்பேட்டை,  தர்மபுரி, அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்களுக்கு ஐந்து வாகன்ங்கள் வழங்கப்படும். 

தண்டையார்பேட்டை வட்டத்தில் தங்கசாலையில் 60 லட்ச ரூபாய் செலவில் 1250 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்படும். 50 கோடி செலவில், 65 கிடங்குகள் கூடுதலாக கட்டப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.1.7 கோடி செலவில், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். என்று அமைச்சர் புத்தி சந்திரன் கூறினார்.



பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்: சி.பி.ஐ கண்டுபிடிப்பு

இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பழம்பெரும் பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டது. இதுத்தொடர்பான வழக்குகள் உ.பி மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுத்தொடர்பாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.

கரசே வகர்களை அழைத்து வந்தது யார்? மஸ்ஜிதை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர். சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ஆம் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித் துறைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள சி.பி.ஐ, விரைவில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு பின்னணியில் உள்ள சில தகவல்களை வெளியிடும் என்று தெரிகிறது.

குறிப்பாக பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. எந்த நாட்டில் இருந்து யார் மூலம் அந்த ஹவாலா பணம் வந்தது? மஸ்ஜிதை இடித்த கரசேவகர்களுக்கு அந்த பணம் எப்படி பட்டுவாடா செய்யப்பட்டது? என்பன போன்ற தகவல்களை சி.பி.ஐ. கசியவிடும் என்று தெரிகிறது.

சி.பி.ஐ தன் முதல் தகவல் அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங், உள்பட 48 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளது. லிபர்ஹான் கமிஷன் 68 பேரின் பெயர்களை கூறியுள்ளது. அவர்களை பற்றி மீண்டும் சி.பி.ஐ. தகவல்களை திரட்டுவதாக தெரிகிறது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பா.ஜ.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


 

ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.

ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஹஸாரே குழுவைச் சார்ந்த கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரவால் ஆகியோர் இமாமின் வீட்டில் சந்திப்பை நிகழ்த்தினர். முஸ்லிம்களை போராட்டத்தில் கலந்துக்கொள்ள செய்யாததற்கு இமாம் தனது கடுமையான அதிருப்தியை ஹஸாரே குழுவினரிடம் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகவும் களமிறங்க வேண்டும் என ஹஸாரே குழுவினருக்கு இமாம் கோரிக்கை விடுத்தார்.




பெர்சனல் கம்ப்யூட்டர் விரைவில் அழியும் அபாயம்

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கணணிகள் வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டில் ஐ.பி.எம். பெர்சனல் கணணியை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில்நுட்பம் பெர்சனல் கணணியின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார். 

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கணணிகள் இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும் புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார். 

கணணியில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் இனி பெர்சனல் கணணி போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கணணி என்ற ஒரு தனி சாதனம் இருக்காது என்கிறார் இவர். 

இன்றைய பெர்சனல் கணணி மறைவதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம் சரியாகவே உள்ளது. இப்போது கணிப்பொறியில் மேற்கொள்ளப்படும் வேலைகளெல்லாம் இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
வேகமாகப் பரவி வரும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. கோப்புகள் உருவாக்கப்படுவதும், சேமிக்கப்படுவதும், பகிர்ந்தளிக்கப்படுவதும், தகவல்கள் சேமிக்கப்பட்டு தேடப்பட்டு பயன்படுத்தப்படுவதும் இப்போது இணையத்திலேதான் நடக்கிறது. 

பெர்சனல் கணணி இதனை மேற்கொள்ள வழி தரும் ஒரு சாதனமாகத்தான் உள்ளது. நம் பெர்சனல் கணணியின் கணிக்கும் பணியினைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோம். எனவே நாம் இதுவரை மேற்கொண்ட வேலைகள், பயன்பாடுகளைக் கொண்ட பெர்சனல் கணணி இனி காணாமல் போய் விடும் என்கிறார் மார்க் டீன். இந்தக் கருத்து சரியானதாகவே தோன்றுகிறது.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து உயர்நிலை நிர்வாக வல்லுநர் கருத்து தெரிவிக்கையில் இந்த ஆண்டு 40 கோடி பெர்சனல் கணணிகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
எனவே பெர்சனல் கணணிக்கு பிந்தைய காலம் என்று குறிப்பிடுவது தவறு. பெர்சனல் கணணியுடன் இணைந்த காலம் என்று தான் புதிய சாதனங்களைச் சொல்ல வேண்டும். இனி வரும் காலங்களில், பெர்சனல் கணணி(அல்லது மேக் கணணி) இல்லாத ஒரு வீடு இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார். 

இதுவும் சரியென்றே படுகிறது. இருப்பினும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.



விண்டோஸ் 7 தரும் புத்தம் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 

1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்பறைகளை டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கோப்பறையில் மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும். 

2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில் எளிதாக அதில் வேலை செய்திட இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்திடவும். 

3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம் மிகத் தெளிவான துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த வசதி மடிக்கணணிகளில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம் அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம். 

4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். 

எடுத்துக்காட்டாக முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும். 

5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும். 

6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கணணியிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால் பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து தீர்வைத் தெரிந்து கொள்ளலாம். 

விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர்.


Tuesday 23 August 2011

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா

பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.


சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே நம்பிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

தொழுகை வேளைகளில் ஒரு இஞ்ச் இடம் கூட காலி இல்லாத அளவுக்கு மஸ்ஜிதுல் ஹராமில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஃபஜ்ர் தொழுகைக்கோ தொழுகைக்கான அணிவரிசைகள் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வெளியேயும் தாண்டிச் செல்கிறது.
தவாஃப் என்று அழைக்கப்படும் கஃபாவை தவாஃப் செய்யும் வேளையிலும், ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ’ஸயீ’ என்ற ஓடுதலின்போதும் மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படுகிறது.

தனியாகவும், குடும்பத்தினருடனும் வந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர். ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உம்ராவுக்காக மக்கா வருகைத் தந்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் மஸ்ஜிதுல் ஹரமில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். நோன்பு திறக்கும் வேளையில் ஆயிரக்கணக்கான சுப்ரா என்றழைக்கப்படும் விரிப்புகளில் பேரீத்தம் பழமும், தண்ணீரும் விநியோகிக்கப்படுகிறது.

ஒரு நாள் நோன்பு திறப்பதற்கு ஒன்பது டன் ஃப்ரஸ் பேரீத்தம்பழம் உபயோகிக்கப்படுகிறது. இஃப்தார் சுப்ராக்களின் மொத்த நீளம் 13 கிலோமீட்டர் ஆகும். இதனை தவிர அறக்கட்டளைகள் மஸ்ஜிதுல் ஹரமிற்கு வெளியே இஃப்தார் நடத்துகின்றன.

ஒவ்வொரு தினமும் 3 ஆயிரம் க்யூபிக் மீட்டர் ஸம்ஸம் தண்ணீர் குடிப்பதற்காக விநியோகிக்கப்படுகிறது. 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸம்ஸம் தண்ணீர் அடங்கிய கேன்கள் உள்ளன.

தன்னார்வத் தொண்டர்களை தவிர 700 தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் உள்பட பல்வேறு அமைப்புகள் மஸ்ஜிதுல் ஹரமில் சிறப்பு இஃப்தார் சுப்ராக்களுக்கு ஏற்பாடுச் செய்துள்ளன.

கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமீபியா. இங்குள்ள விண்ட்ஹுக் நகருக்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விபத்துக்குள்ளான கப்பல்கள் தான் அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கும். ஆனால் இந்த கப்பல் சிறிதும் சேதமில்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடலில் கப்பல் மூழ்கி 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் கப்பலின் ரகசிய அறையில் வைக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள் அழியாமல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். 

கப்பலின் அறையில் இருந்து 2,266 தங்க, வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பல பொக்கிஷங்கள் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதால் தீவிர ஆய்வு நடந்து வருகிறது.

கப்பல் மூழ்க காரணம் எதிர்பாராத விபத்தா, திட்டமிட்ட சதியா, கொள்ளையடிக்கும் நோக்கில் தாக்கப்பட்டதா என்றும் ஆய்வு நடக்கிறது. கப்பலில் இருந்து கிடைத்துள்ள பொக்கிஷங்கள் நமீபியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. 

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ஹாரிசன் டவுன்ஷிப் நகரில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. நடுவானில் ஹெலிகாப்டரில் இருந்து குட்டி விமானத்துக்கு தாவும் சாகசத்தை டாட் கிரீன் என்ற வீரர் செய்தார். விமானத்தில் இறங்கியவர் மீண்டும் ஹெலிகாப்டருக்கு தாவும் நேரத்தில் எதிர்பாராவிதமாத பிடி நழுவியது. 200 அடி உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்வதற்கு

கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.
இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம். 

இந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள். 

தேவையானதை டிக் செய்து கீழே உள்ள தரவிறக்க பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

டெல்லி இமாம் கேள்வி: ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை !

அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு அச்சுறுத்தலானது. மதவாதத்தை குறித்து ஹஸாரே வாயை திறப்பதில்லை. ஹஸாரே அவரின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்தியிடமிருந்து விடுபடவேண்டும்.

குஜராத்தில் முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதற்கு தலைமை வகித்த நரேந்திரமோடிக்கு புகழாரம் சூட்டியவர்தாம் ஹஸாரே. முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு வந்தேமாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற முழக்கங்கள் எதிரானதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் தேசத்தை வணங்கச் சொல்லவில்லை. சில முஸ்லிம்கள் ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கு பெற்றாலும் கூட அவர்கள் நாட்டின் 25 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அல்லர். இவ்வாறு டெல்லி இமாம் கூறியுள்ளார்.

Saturday 20 August 2011

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் கிளப்பின் இப்தார் விருந்து

துபாய் வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் நேற்று முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக இரண்டாம் ஆண்டு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 




இதில் முத்துப்பேட்டை சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்தார் விருந்தில் கலந்து கொண்டு இப்தாரை சிறப்பித்தனர். இந்த இப்தார் விருந்தினால் முத்துப்பேட்டை சகோதரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்தது. 

மாஷா அல்லாஹ்.. இது போன்ற செயல்களை மென் மேலும் செய்ய மூன் லைட் கிரிக்கெட் அணி சகோதரர்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.

முத்துப்பேட்டையில் இலவச கண் பரிசோதனை

முத்துப்பேட்டையில் ரோட்டரி கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் 75வது இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.

புதுப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 134 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 36 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

முத்துப்பேட்டை அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும்

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்தினை தடுக்க  ரவுண்டானா அமைக்க வேண்டும் என  பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
முத்துப்பேட்டை நகரின் குறுகிய சாலை பயணத்தால் ஏற்ப்படும் பாதிப்பை தவிர்க்க பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பட்டுக்கோட்டை ரோடு செம்படவன் காடு துவங்கி திருத்துரைப்பூண்டி ரோடு ஆலங்காடு வரையிலும் கோவிலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயனில் உள்ளது. 

இந்நிலையில் கோவிலூர் மற்றும் ஆலங்காடு சாலை இணைப்பு முகப்பு பகுதியில்
ரவுண்டானா இல்லாததால் வாகன விபத்து அதிகரித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இதையொட்டி கோவிலூர் நால்ரோடு பகுதியில் ரூ80  லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுமை பெறாத நிலையில், அமைக்கப்படும் தடுப்புகள் திடமின்றி இருக்கின்றன. இரு சக்கர வாகனம் மோதினால் கூட பெயர்ந்துவிடும் அளவுக்கு தடுப்புகள் அமைந்துள்ளன. தடுப்புகளை அகற்றி விட்டு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும்.

மேலும்
முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதி மற்றும் ஆலங்காடு பகுதியில் ரவுண்டானா அவசியம். இப்பகுதியில் இது நாள் வரையிலும் உயிரிழப்புகளும், வாகன விபத்துகளும் அதிகம் ஏற்ப்பட்டுள்ளது. கோவிலூர் போன்று ஆலங்காடு சாலை இணைப்பு மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டால் தான் தொடர் விபத்துகளும், உயிரிழப்புக்களையும் தவிர்க்க முடியும்.

எனவே விபத்தை தடுக்க
முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதி மற்றும் ஆலங்காடு சாலை இணைப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். 

Friday 19 August 2011

நோன்பு கஞ்சிக்கு அரிசி தரவில்லை அரசு: திருவாரூரில் போராட்டம்!

ரமளான் நோன்பு கஞ்சி வைக்க அரசு அரிசி வழங்காததைக் கண்டித்து திருவாரூரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு போராட்டம் நடத்தியது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானின், நோன்பு கஞ்சிக்குத்  தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும்  அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் இவ்வருடமும் அரசு அரிசி வழங்கியதில், சில பகுதிகளுக்குச் சரிவர அரிசி  வழங்கவில்லை என பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. அதன் வகையில் திருவாரூரில் சரிவர  அரிசி வழங்கவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று(வியாழன்)  போராட்டம் நடைபெற்றது.

இதில் திருவாரூருக்கு அரிசி வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனபோக்கைக் கண்டித்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தன் எதிர்ப்பைக் காட்டினர். இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

குர்துக்களின் தாக்குதல்:எட்டு துருக்கி ராணுவத்தினர் பலி

துருக்கியில் குர்து எதிர்ப்பாளர்கள் நடத்திய தாக்குதலில் எட்டு துருக்கி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஈராக்கின் எல்லையை யொட்டிய ஹகாரி மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராணுவத்தினரின் வாகனம் கடந்து செல்லும் வேளையில் கண்ணிவெடிக்குண்டு வெடித்து சிதறியது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நிகழ்ந்துள்ளது.

குர்திஸ்தான் வர்க்கர்ஸ் பார்டி(பி.கே.கே) இத்தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மத் இல்மாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இப்பகுதியில் ஜூலை மாதத்திற்கு பிறகு ஏராளமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

லோகாயுக்தாவை கண்டு மிரளும் மோடி: காங்கிரஸ்

ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை ந‌ரேந்திர மோடி திட்டமிட்டு லோகாயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார்.

ஆனால் முதல்வர் நரேந்திரமோடி அதனை தடுக்கும் முயற்சியில் உள்ளார். அவர் லோகாயுக்தா என்றாலே மிரளுகிறார். லோகாயுக்தா சட்டத்தின் படி ஐகோர்ட் நீதிபதி பரிந்துரையில் பேரில் நீதிபதி ஆர்.ஏ. மெகதா என்பவரை லோகாயுக்தா நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வர் நரேந்திர மோடி அதனை தடுத்துவிட்டார். இந்நிலையில் முதல்வர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது வேடிக்கையானது என்றார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More