சற்றுமுன்

Thursday 1 September 2011

உலகின் முதலாவது 17 அங்குல இரட்டை திரைகளுடன் கூடிய மடிக்கணனி

உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

‘ஸ்பேஸ்புக்’ என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது. வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார். 

மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது. 

ஏசர் நிறுவனமும் இரட்டைத் திரைகளைக் கொண்ட மடிக் கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More