முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் கனவாய் மீன்கள் சீசன் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் மீனவர்களின் வலையில் கனவாய் மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன. கனவாய் மீன்களில் ஆக்டோபஸ்,பேபி சுருட்டி, சி எப் ஆகிய வகைகள் உள்ளன.
இந்த 4 வகை கனவாய் மீன்களும் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் கடற் பகுதிகளில் அதிகம் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனவாய் மீன்கள் வரத்து அதிகம் உள்ளதால் ஏற்றுமதியும் தீவிரமடைந்துள்ளது.
இது பற்றி முத்துப்பேட்டை மீனவர்கள் கூறுகையில்:
இந்த வகை கனவாய் மீன்கள் சாப்பிடுவதற்கு ஆட்டுக்கறி போன்று இருக்கும் மேலும் இது மருத்துவ குணமுடைய மீன்கள். இது குறுப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. இதனால் இவை ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இப்போது அக்டோபஸ் ஒரு கிலோ ரூ 60க்கும், பேபி கனவாய் ரூ 40க்கும், சுருட்டி ரூ 150க்கும், சி எப் ரூ 200க்கும் விற்கப்படுகிறது.
0 comments:
Post a Comment