சற்றுமுன்

Tuesday 27 September 2011

உள்ளாட்சி தேர்தல் - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் !

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக தேர்தல் ஆணையம் ''உள்ளாட்சித் தேர்தல்கள் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதோடு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநில தேர்தல் ஆணையம் அனைத்து வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தலில் நன்னடத்தை விதிகள் முழுமையாக அமல்படுத்த அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து அவர்களின் கருத்துக்களைப் பெற விரும்புவதாகவும் அனைத்துக் கட்சிகளும் தவறாமல் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறுமாறும் ''தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More