சற்றுமுன்

Thursday 6 October 2011

தாய்லாந்து புயல் மழை: 244 பேர் பலி !

தாய்லாந்தைப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 244 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டு காலத்தில் தாய்லாந்தைத் தாக்கிய இயற்கை சீற்றங்களில் இதுவே மிகப் பெரிய அழிவை உண்டாக்கிய இயற்கை சீற்றம் எனக்கருதப்படுகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுவரையிலான கணக்கில் 244 பேர் மழை வெள்ளத்திற்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை நிற்காமல் பெய்து வரும் மழை, காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்வதால் மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என காலநிலை மையம் தெரிவித்துள்ளது.





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More